Sunday 9 March 2014

Back with a bang

Hello readers,

be ready for updates and you will get all the usefull info from your favourite blog.
Thanks for your support.

Regards,

Villainerz

Saturday 26 January 2013

"Chitti - the Robot" at Chennai Hospital






மருத்துவத்துறையில் எந்திரன்:
நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் அறிமுகம்

இயந்திர மனிதனை மருத்துவத்துறையில் பயன்படுத்தும் தொழில்நுட்பம், கிராமப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார். சென்னை இராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழகத்தின் தொலைதூர மருத்துவப் பிரிவில் "சிட்டி" என்ற ரோபோ சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர மனிதன், 24 மணி நேரமும் நோயாளியின் நிலையைக் கண்காணித்து அது தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பும் திறன் கொண்டதாகும். மேலும், நோயாளிகளிடம் 24 மொழிகளில் நேரடியாக பேசும் திறனும் இதற்கு உள்ளது. ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன், ஐபேட் ஆகியவை மூலம், உலகின் எந்த மூலையில் இருந்தும் இதனை இயக்க முடியும். நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகமாகும் இந்த சேவையை தொடங்கி வைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், மருத்துவர்கள் இல்லாத காலத்தில் நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்றவாறு ரோபோக்கள் சிகிச்சை அளிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், நானோ தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருவதாகவும், இனி நுண் மின்னணுவியலுக்கு மாற்றாக அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்பம் இடம் பெறவுள்ளதாக தெரிவித்தார். மருத்துவம், மின்னணுவியல், பருப்பொருள் அறிவியல் ஆகியவற்றிலும் கூட இது சாத்தியமாகும் என்ற அவர், நானோ ரோபோக்கள் மருந்துகளை விநியோகிக்கும் பணியை ஒழுங்கு படுத்தவும் உதவும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

Tooth Care for a Clean Smile


Friday 25 January 2013

Proud to be an INDIAN..!!




Freedom in the mind,
Faith in the words,
Pride in our hearts &,
Memories in our souls,
Lets salute,
The Nation on Republic Day....!!!!!



Facts about Reading Aloud




Reading Aloud Important, but Too Many Children Neglected.

Reading aloud to children is vital because it helps them acquire the information and skills they need in life:

Knowledge of printed letters and words, and the relationship between sound and print.
The meaning of words.
How books work, and a variety of writing styles.
The world in which they live.
The difference between written language and everyday conversation.
The pleasure of reading.

Reading to young children promotes language acquisition and literacy development and, later on, achievement in reading comprehension and overall success in school. The percentage of young children read aloud to daily by a family member is one indicator of how well young children are prepared for school. Yet, recent studies on family reading suggest too many youngsters go without the benefit of a family member reading to them.


The Early Childhood Longitudinal Study, Birth Cohort (ECLS-B) collected information on children who were born in 2001 and focused on several aspects of early childhood development, including interactions between young children and their families and the ways by which parents raise, nurture, and prepare their children for school. Data were collected on the children as infants (at about 9 months old), then as toddlers (at about 2 years old), and again as preschoolers (at about 4 years old).

At each age, between one-third and one-half of these children were read to daily by a family member. In addition, approximately one-fourth of children at each of these ages were told stories daily, and between one-half and three-quarters were sung to daily.
In general, at all ages, a higher percentage of White children had family members who read to them daily than did children of other races/ethnicities.
A higher percentage of Asian children were read to than Hispanic and American Indian/Alaska Native children at all ages, and than African American children at ages 2 and 4 (with rates not measurably different at 9 months of age).
Forty-one percent of White, 26 percent of Asian, 23 percent of African American, 21 percent of Hispanic, and 18 percent of American Indian/Alaska Native 9-month-olds had family members who read to them daily.
Overall, a smaller percentage of children in poverty were read to, told stories, or sung to daily by a family member than children at or above poverty.
In general, levels of maternal education were positively related to the percentage of children who were read to, told stories, or sung to daily.
A smaller percentage of children whose families spoke a language other than English in the home were read to, told stories, or sung to daily than children whose families spoke primarily English in the home.

நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு..!!!!!




சில சந்தேகங்கள் நாம் அருந்தும் தண்ணீரைப் பற்றியது.

1.இரவில் தூங்க செல்லும் முன்னர் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீர் அருந்திவிட்டு படுக்கச் செல்வது சரியா
2.அல்லது சுட வைத்த தண்ணீரை ஆற வைத்துதான் அருந்திவிட்டு தூங்க செல்லவேண்டுமா.
3.பகலில் அதிக முறை குறைந்த தண்ணீர் அருந்துவது சரியான முறையா
4.அல்லது சில முறை குடித்தாலும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது சரியான முறையா.
5.மேற்கண்ட எல்லா முறையிலும் தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவதுநல்லதா.
6.அல்லது சூடான தண்ணீரை ஆற வைத்துத்தான் அருந்த வேண்டுமா.




பதில்.

எமது உடலின் செயற்பாடுகளுக்கு ஒட்சிசனுக்கு அடுத்ததாக அத்தியவசியாமான பொருள் நீர் என்றால் மிகையில்லை.ஆனாலும் அநேகமானோர் உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு நீரை அருந்துவதில்லை. ஒவ்வொருநாளும் நாம் பல்வேறு விதாமாக உடலில் இருந்து நீரை இழந்துகொண்டிருக்கிறோம்.

சிறுநீர், சுவாசம், வியர்வை, மலம் என பல்வேறு வழிகளினூடாக நாம் நீரை தினம்தோறும் இழக்கிறோம். இந்த நீர் மீண்டும் நமது உடலைச் சேருவது நாம் அருந்தும் நீர் மூலமாகவும், உணவில் உள்ள நீர் மூலமாகும்.

ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான அளவு நீர் அவர் மேலே சொன்ன வழிமுறைகள் மூலம் இழக்கும் நீராகும். அதுதான் வியர்வையான காலத்தில் அதிகம் நீர் வியர்வை மூலம் இழக்கப் படுவதால் அதிக நீர் உடலுக்குத் தேவை என்பதால் தாகம் அதிகரிக்கின்றது.

ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது அவரின் உடல் நிறை, அவர் வசிக்கும் காலநிலை, அவர் செய்யும் வேலையின் அளவு என்பவற்றில் தங்கியிருக்கிறது.

அண்ணளவாக ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவைப்படுவது அவரின் ஒரு கிலோ உடல் நிறைக்கு 35ml நீராகும்.

இருந்தாலும் மேலே சொன்னதுபோல இந்த அளவு காலநிலை மாற்றம், மற்றும் வேலையின் அளவு என்பவற்றைப் பொருத்தும் மாறுபடும்.

சரியாக கணிக்கப்படாவிட்டாலும் அண்ணளவாக ஒருநாளைக்கு குறைந்தது இரண்டரை லீட்டர் நீராவது குடிப்பது அவசியமாகும்.

உங்களுக்குத் தேவையான இந்த நீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அருந்தலாம்.
அதாவது சூடாகவோ, ஆறியதாகவோ அல்லது பழச் சாறாகவோ.

அதை உங்கள் விருப்பப் படி விரும்பிய அளவுகளில் குடித்துக் கொள்ளலாம்.(எத்தனை தடவையில் குடித்து முடிக்க வேண்டும் என்று கணக்கிடத் தேவையில்லை)

ஆனாலும் அளவுக்கதிகமாக ஒரேயடியாக நேரை குடிப்பதால் மற்றைய வேளைகளில் கவனம் குறையலாம்.
இரவிலே அதிகம் நீரை அருந்தினால் சிறுநீர் கழிப்பதற்காக நித்திரை குழம்ப வேண்டியும் ஏற்படலாம்.

மேலே சொன்னதெல்லாம் ஆரோக்கியமான ஒருவருக்குத் தேவையான நீரின் அளவாகும்.

Angles for Insertion...!!!!


மூளை வளர்ச்சியடைய உண்ண வேண்டிய உணவுகள்..!!!





ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும். 

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். 

பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. 
இதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.


Tuesday 15 January 2013

பென்சிலின் உருவான கதை..!!






அறிவியல் உலகில் தற்செயலாக பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.அதில் ஒன்று தான் பென்சிலின். மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்ததும்தான், நியூட்டன் புவி ஈர்ப்பு விசையையே கண்டுபிடித்தார். அதேபோல் தான் அலெக்சாண்டர் பிளமிங்கும் பென்சிலினைக் கண்டறிந்தார். அந்த சுவையான சம்பவத்தைப் பற்றிப் பார்ப்போமா.
பிளமிங், 1881ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரின் போது படை வீரர்கள் பலர் காயமடைந்து தொற்றுநோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இறந்தனர். இதைக் கேள்விப்பட்டு பாக்டீரியாவைக் கொல்லும் மருந்தைக் கண்டுபிடிப்பேன்’ என்று சபதம் கொண்டார் பிளமிங்.





1928ல் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் ஒரு விடுமுறை நாளில் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அன்று விடுமுறை நாளாக இருந்ததால் ஆய்வுப் பொருட்களை அப்படியே வைத்துவிட்டுச் சென்றார். அதில் ஒரு தட்டு மூடாமல் இருந்தது. சுற்றுப்புறமும் அசுத்தமாக இருந்தது. அப்போது வீசிய காற்றால் மெல்லிய பூஞ்சணம் அந்த தட்டில் படித்திருந்தது. 
சில நாட்கள் கழித்து அந்த தட்டை ஆராய்ந்து பார்த்தார் பிளமிங். அப்போது பூஞ்சணம் படிந்த இடத்தில் கிருமிகள் முழுவதும் அழிந்திருந்தன மற்ற பகுதியில் பெருகி இருந்தன, உடனே பிளமிங் அந்த பூஞ்சணத்தைப் பயன்படுத்தி ஒரு மருந்து தயாரித்தார். பூஞ்சணத்தின்பெயர் பென்சிலினா நோடேடம். அதனால், அந்த மருந்துக்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.

இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் பிளமிங் ஒரு நவீன ஆய்வு கூடத்துக்குச் சென்றார். அங்கே ஆய்வுக் கருவிகள் பளபளப்பாகவும், தூய்மையாகவும் இருந்தன. சுற்றுச் சூழல் தூசியற்றும் குளிரூட்டப்பட்டும் இருந்தது. அப்போது ஒருவர் ‘உங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை. ஒரு தரமான ஆய்வகம் கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையே? அப்படி கிடைத்தால் நீங்கள் இன்னும் நிறைய மருந்துகளைக் கண்டுபிடித்திருப்பீர்களே’ என்று சொன்னார். அதற்கு பிளமிங் அமைதியாக, ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், நிச்சயமாக பென்சிலினைக் கண்டுபிடித்திருக்க மாட்டேன்’ என்றார்.




நம்மை கொல்லும் 'கோபம் !!!




கோபம் மனித இனத்தின் முதல் எதிரி. அச்சம் கலந்த கோபம் பலஇனங்களையே அழித்திருக்கிறது. கோபம் ஏவிவிடப்பட்ட ஏவுகணைபோன்றது. ஒன்று அயலாரை அழிக்கும். அடக்க நினைத்தால் தன்னையே அழிக்கும். இதையே நமது பொய்யாப்புலவன் வள்ளுவர்'தன்னையே கொல்லும் சினம்' என்கிறார்.

"எனக்கு கோபம் வந்ததுன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது''என்று சிலர் ஆவேசமாக பேசுவார்கள். அப்படி எக்கச்சக்கமாக உணர்ச்சிவசப்பட்டால் அழிவு நிச்சயம் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

சுவீடன் நாட்டில் உள்ள 'ஸ்ட்ரெஸ்' ஆய்வு மையம் இதைகண்டுபிடித்துள்ளது. 2 ஆயிரத்து 755 தொழிலாளர்களை 1992 முதல் 2003வரை ஆய்வு செய்தனர். இவர்கள் அனைவரும் எவ்வித இதய பாதிப்பும்இல்லாதவர்கள். ஆய்வு முடிவில் இவர்களில் 47 பேர் மாரடைப்புமற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் சிலர்இறந்துவிட்டனர்.

இவர்களின் பாதிப்புகளுக்கு அடிப்படையாக இருந்தது கோபம்தான். பொருளாதார காரணங்கள், வேலைப்பளு,பிடிவாதகுணம், உடலியல் பாதிப்புகள், உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் உள்பட பல்வேறு காரணங்களால்கோபம் உற்பத்தி ஆகிறது.

அதேபோல் அலுவலக ரீதியாகப் பார்த்தால் சில காரணங்களால் கோபம் வருவது கண்டுபிடிக்கப்பட்டது.அதாவது சொல்லிக் கொள்ளாமல் சில காரியங்களில் ஈடுபடுவது, வெளியே சென்றுவிடுவது, மேலதிகாரிமற்றும் உடன் பணி செய்பவர்களுடன் ஒத்துழைப்பு கிடைக்காதது/ கொடுக்காதது போன்றவை குறிப்பிடத்தக்ககாரணங்கள்.

இவ்வாறாக உருவாகும் கோபமும், அதிகப்படியான உணர்ச்சிகளும் இதயம் சம்பந்தமான பல பாதிப்புகளைஏற்படுத்துகின்றன. எனவே கோபத்தைக் குறைத்தால் நலமாக வாழலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுசரி...இந்த ஆபத்தான கோபத்தைக் எப்படிக் குறைப்பது?. அதற்கும் ஆய்வாளர்கள் சில வழிகளை சொல்லிஇருக்கிறார்கள். அவை வருமாறு:-

எந்த எண்ணங்களையும் மனதில் அடக்கி வைக்காமல்நேரடியாகவெளிப்படுத்திவிட வேண்டும்.
யாரையும் சந்திக்க நேர்ந்தால் தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்தில்சந்தித்துபேசுங்கள்.
கவலைகள் ஏற்படும்போது மனதில் தேக்கி வைக்காமல் வெளிப்படையாக அழுதுதீர்த்துவிடலாம்.
எந்த ஒன்றைப் பற்றியும் நடந்து முடிந்தபிறகு மீண்டும்ஞாபகப்படுத்திபார்க்காமல் அமைதியாக இருக்கப்பழக வேண்டும்.
சந்தோஷ வாழ்வுக்கு வழிதேடுபவர்கள் முக்கியமாக இந்த 4 வழிகளைப் பின்பற்றினாலே உடலில் பலதொல்லைகள் தொற்றிக் கொள்ளாமல் தடுத்துவிடலாம்.

Sunday 13 January 2013

A Doctor's Touch - Abraham Verghese


Before he finished medical school, Abraham Verghese spent a year on the other end of the medical pecking order, as a hospital orderly. Moving unseen through the wards, he saw the patients with new eyes, as human beings rather than collections of illnesses. The experience has informed his work as a doctor -- and as a writer. "Imagining the Patient’s Experience" was the motto of the Center for Medical Humanities & Ethics, which he founded at the University of Texas San Antonio, where he brought a deep-seated empathy. He’s now a professor for the Theory and Practice of Medicine at Stanford, where his old-fashioned weekly rounds have inspired a new initiative, the Stanford 25, teaching 25 fundamental physical exam skills and their diagnostic benefits to interns. 

He’s also a best-selling writer, with two memoirs and a recent novel, Cutting for Stone, a moving story of two Ethiopian brothers bound by medicine and betrayal.

He says: “I still find the best way to understand a hospitalized patient is not by staring at the computer screen but by going to see the patient; it's only at the bedside that I can figure out what is important.”





"Art and medicine may seem disparate worlds, but Dr. Verghese insists that for him they are one. Doctors and writers are both collectors of stories."
-New York Times



10 Amazing Facts about Gehirn (Brain)

1.Weight:


Human Brain weighs about 3 pounds.


2.Pain:


Human Brain does not feel any pain because, there are no pain receptors in brain.


3.Fat content:


Human Brain is the fattest organ in the body (at least 60%).


4.Survival time:


Human brain can survive for 4 to 6 minutes without oxygen before it starts to die.


5.Time to consciousness:



Human brain gets 8 to 10 seconds before losing consciousness due to blood loss.


6.Power generated by Brain:


Human brain generates about 10 to 23 watts of power when awake (that power is enough to burn a bulb).


7.Blood & Oxygen supply:


Human Brain gets about 20% of total body oxygen and blood.


8.Brain's Blood vessels length:


Total length of blood vessels present in the brain is 100,00 miles.


9.No. of Synapses:


Human Brain contains 1,000 to 10,000 synapses for each neuron.


10.No. of neurons:



Human Brain contains about 10billion neurons.

Courtesy: ResearchOnMedical.com